ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் கூட்டுத்தாபன பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,
“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.
இலங்கையில் எரிபொருளை இறக்குவதற்கான இரண்டு இடங்கள் மட்டுமே எள்ளதால், எரிபொருள் கப்பல்கள் வரக்கூடிய திகதிகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பிலேயே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.








