மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடியில் மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நாவற்குடா பகுதியில் நேற்று (1) இரவு ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வெளி நாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியில் இருந்து சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி உயிரிழந்த இளைஞனன் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டர் சைக்கிளின் புகைபோக்கியில் தட்டுப்பட்டதையடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞன் சம்பவ இடம்திலே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையல் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வந்தவர் என்பதுடன் விடுமுறைக்காகத் தாய்நாடு வந்திருந்தவர் எனவும் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கத்தார் செல்ல இருந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








