அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானுக்கு மேலும் 48 மணி நேரம் கால அவகாசம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில் பதற்றம் அதிகரிக்கும்.
ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அல்லது ஹோர்முஸ் நீரிiணையைத் திறப்பதற்கு ஈரானுக்கு நான் பத்து நாட்கள் அவகாசம் கொடுத்ததை நினைவில் கொள்ளுங்கள்.
நேரம் விரைந்து கொண்டிருக்கிறது.
இன்னும் 48 மணி நேரத்தில் அவர்கள் உடன்பாட்டுக்கு வராவிட்டால் நரகத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.








