ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.
இதற்கிடையில் உக்ரைன் உடனான போரில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் போக்கு தொடர்ந்து வருகின்றது.
அதிக சம்பளம் தருவதாக ஆசை காட்டி நாட்டுக்கு அழைத்து ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
முறையான போர் பயிற்சி இல்லாததால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரஷ்ய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும் 7 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய தகவலின்படி, ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இந்தியர்கள் சிலரின் உடல்கள் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ரஷ்ய இராணுவத்தில் உள்ள 35 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








