திருகோணமலை புகையிரத நிலையத்தில் நேற்று (08) மாலை சுமார் 3.00 மணியளவில் நிறுத்தியிருந்த ஒரு புகையிரத இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு வரும் புகையிரதங்களை நிலையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரம், நேற்று மதியம் கொழும்பிலிருந்து வந்த புகையிரத பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பற்றியதற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதியாக அறியப்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினர் விரைவில் தகவல் வழங்குவார்கள் என பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தால் புகையிரத இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.








