நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியான தணிக்கை அறிக்கையையடுத்து, இதுவரை அரசாங்கத்திற்கு ஆதரவாக எடுத்திருந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறினார். முன்னர் சந்தேகங்களுக்கு இடமிருந்த போதிலும், அரசாங்கத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதாகவும், ஆனால் தற்போது வெளியான உத்தியோகபூர்வ அறிக்கை பல முக்கிய உண்மைகளை வெளிச்சமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த அறிக்கையின் படி, நிலக்கரி கொள்முதல் செயல்முறையில், குறிப்பாக டெண்டர் நடைமுறைகள் மற்றும் நிறுவனத் தெரிவுகளில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். இது சாதாரண நிர்வாகப் பிழைகளை விட அதிகமாக, சில தரப்புகள் முறையற்ற இலாபம் பெற முயன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை அரசாங்கத்திற்கு சந்தேகத்தின் பலனை வழங்கியிருந்தாலும், இந்த அறிக்கைக்குப் பிறகு அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சன ரீதியாக அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரம் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர், அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் இதற்கான இறுதி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








