Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

2 months ago
in செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை’ அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்து விபரங்களை முழுமையாக முடக்குவதற்கு முடியும். அதன்படி, அந்தச் சொத்துக்களைப் பயன்படுத்துதல், மாற்றுதல் அல்லது விற்பனை செய்தல் என்பன சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறையானது, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் மூலம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1373 (2001) தீர்மானத்திற்கு இணங்க செயல்படுத்தப்படுகிறது.

இத்தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் உள்ள அதேவேளை, அதன் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் “தகுதியுள்ள அதிகாரியாக” நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கும், நாட்டின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும், சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகத்தினால் www.competentauthority.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன சட்ட மற்றும் நிர்வாக நடைமுறையூடாக இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.