நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் மற்றும் நகரின் முக்கிய வீதிகள், சந்திகள் உள்ளிட்ட பல பொது இடங்களில் இந்த ஆதரவுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வரும் சீமானுக்கு ஆதரவாக இலங்கையின் வடக்கே இவ்வாறு பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.








