புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அந்தத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், வாகன உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட்டு இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டட்லி அவர்களின் கார் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எமது நாட்டிலும் அவ்வாறான வாகன இலக்கத் தகடுகளில் ‘டட்லி’ என்பது போல உரிமையாளரின் பெயரைப் பொறித்துப் பெற முடியாதா?” என கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிரியந்த திஸாநாயக்கவிடம் கேள்வியெழுப்பியபோது,
“நிச்சயமாக முடியும். அந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். எமது கணினி கட்டமைப்பு இற்றைப்படுத்தப்பட்டவுடன், இத்தகைய விசேட செயற்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.








