Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
15,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறை!

15,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறை!

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, மொனராகலை மாவட்டம் வெல்லவாய பகுதியில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம், இந்த அதிகாரி சட்ட விவகாரங்களைச் சாதகமாக முடித்துக் தருவதாக கூறி 15,000 ரூபாய் இலஞ்சமாக கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக 2009 செப்டம்பர் 02 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (23) தீர்ப்பை அறிவித்தது.

இலஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 6 ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இலஞ்சமாகப் பெறப்பட்ட 15,000 ரூபாய்க்கு இணையான மேலதிக அபராதத்தையும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த ஊழல் வழக்கு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முறையான விசாரணைகளின் ஊடாக நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கும்; எதிர்வு கூறும் மத்திய வங்கி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கும்; எதிர்வு கூறும் மத்திய வங்கி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.