Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

அதற்காக விகாரை பகுதிக்கு வந்தவர்களை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் பொலிஸார் வீதி சோதனை சாவடியை அமைந்து , காணி உறுதிகள் , அடையாள அட்டைகளை பரிசோதித்து தான் அனுமதிப்போம் என பொலிஸார் கூறியமையால், காணி உரிமையாளர்களுக்கும் , பொலிஸாருக்கும் தர்க்கம் ஏற்பட்டது.

அதனை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த கிராம சேவையாளர் காணி உரிமையாளர்களை அங்கிருந்து விகாரை பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு, காணி உரிமையாளர்கள் ” காணியை விடுவிக்கும் நோக்குடனையே காணிகளை அளக்கின்றோம்” என எழுத்தில் உறுதி மொழி தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரியதால் , அவ்வாறு நாம் எழுத்தில் தர முடியாது என அதிகாரிகள் கூறியமையால் , நீண்ட இழுபறி ஏற்பட்டது.

பின்னர் , விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி அமைந்துள்ளமையால் , அவற்றினை அளவீடு செய்யும் பணிகள் இடம்பெற்றன.

காணி உரிமையாளர்கள் “காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்” என எழுத்து மூல உறுதி மொழி தராது விடின் காணிகளை அளவீடு செய்ய சம்மதிக்க மாட்டோம் என உறுதியாக நின்றமையால் , காணி அளவீட்டு பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் தடைபட்டது

கடந்த 17ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட வேளை, விகாராதிபதி அதற்கு சம்மதிக்காது , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையால் அன்றைய தினம் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் , இன்றைய தினம் இரண்டாவது தடவையாக காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் , காணி உரிமையாளர்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றாததால் , அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

August 14, 2026
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்
அரசியல்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

August 14, 2026
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!
செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!

August 14, 2026
அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்
செய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
Next Post
அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.