பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவரை கடத்திச் சென்று கையையும் காலையும் கட்டி அவரை கொடூரமாக தாக்கிய இந்திய நாகபட்டின காடை மீனவர்களின் ஒரு வெறித்தனமான சர்வதேச மனித உரிமை மீறல் செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அதேவேளை வடக்கு கிழக்கில் இருக்கும் அத்தனை தமிழ் தலைமைகளும் ‘நக் உண்டார் நா விழந்தார்’ என்ற பழமொழிக்கு அமைய தமிழ் மக்கள் துன்புறத்தப்படும் போது கண்டனக் குரல்கள் எழுப்பாது மௌனமாக மௌனமாக இருப்பது ஏன்? என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொப்புல் கொடி உறவு என கூறிக் கொண்டு இரு நாடுகளாக இருந்தாலும் பேசுகின்ற மொழி ஒன்றாக இருந்தும் அந்த மீனவரின் கையையும் காலையும் கட்டிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அழைத்துச் சென்று அந்த துறைமுகத்தில் வைத்து அவரை கொடூரமாக துன்புறுத்தி சித்திரவதை செய்து மீண்டும் நாகபட்டின மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளார் இது ஒரு சர்வதேச மனித குற்றம்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








