Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?

இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு தூய தலைமுறையாக மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நேற்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் (NATA) தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்நாயக்க மற்றும் ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த எல்.எல். அமில இசுரு ஆகியோரால் இந்த அறிக்கை அமைச்சகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனியவும் கலந்துகொண்டார்.

தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த “புகையிலையற்ற எதிர்காலத் தலைமுறை” எனும் திட்டமானது, பிரதானமாக இரண்டு முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

முதலாவதாக, புகையிலை மற்றும் மது மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தில் தற்போதுள்ள விதிமுறைகளைப் புதுப்பிப்பதற்கான திருத்தங்களைக் கொண்டுவருவதும், இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதையோ அல்லது அவர்கள் அதனை அணுகுவதையோ சட்டப்பூர்வமாகத் தடை செய்வதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலகின் பல முன்னேறிய நாடுகள் ஏற்கனவே இத்தகைய சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இலங்கையிலும் இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரை போதைப்பொருள் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்நாயக்க, இலங்கையில் நிகழும் இறப்புகளில் சுமார் 80 சதவீதத்திற்குத் தொற்றா நோய்களே காரணமாக இருப்பதாகவும், அந்த நோய்களுக்குப் புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடே மிக முக்கிய காரணியாக அமைவதாகவும் குறிப்பிட்டார்.

உலகளவில் ஆண்டுதோறும் 8 கோடி மக்கள் புகையிலையினால் உயிரிழப்பதாகவும், இலங்கையில் மட்டும் இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 22,000 உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புகையிலை மற்றும் மது ஆகியவை ஏனைய அபாயகரமான போதைப்பொருட்களுக்கான முதல் நுழைவாயிலாக இருப்பதை அவர் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

ராஜரட்டா பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் எல். எல். அமில இசுரு உரையாற்றுகையில், பள்ளி மாணவர்களிடையே சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவது ஒரு பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றார். நாட்டின் சுகாதார சேவைக்காக ஒதுக்கப்படும் பெருந்தொகையான நிதி, புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவே செலவிடப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட, எதிர்காலத் தலைமுறையினர் சிகரெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பையே முற்றாகத் தடுப்பதுதான் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான முறையாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்தப் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்குப் புகையிலையும் மதுவும் பெரும் தடையாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், புகையிலைப் பொருட்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் இந்த உறுதியான திட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்.

நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் இது ஒரு மாபெரும் வெற்றியாக அமையுமெனத் தெரிவித்த அதிகாரிகள், இதனைச் சட்டமாக்குவதற்கான இறுதிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.