Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊபர் மற்றும் பிக்மி ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை வழங்க அரசாங்கம் ஆலோசனை

ஊபர் மற்றும் பிக்மி ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை வழங்க அரசாங்கம் ஆலோசனை

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தத் திட்டத்தின் ஊடாக, குறித்த பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சலுகைகளை வழங்கவும் தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவிக்கையில்,

செயலி வழிப் பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் முறையான ‘தொழில் வழங்குநர் – பணியாளர்’ (Employer-Employee relationship) உறவுநிலை சட்டரீதியாகத் தெளிவாக இல்லாதபோதும், அவர்களை ஒரு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

இவ்வாறான பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகளாவிய ரீதியில் விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.

பொதுவாக ஒரு பணியில் சேரும்போது வழங்கப்படும் நியமனக் கடிதம், கடமைக்கு வரும் மற்றும் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகளைக் கொண்டே ஒரு பணி உறவு தீர்மானிக்கப்படுகிறது.

எனினும், செயலி வழிப் பணிகளில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லாத சூழலிலும் இவர்களுக்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தில் ஊபர் மற்றும் பிக்மி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் அமைச்சின் மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, குறித்த செயலிகளில் பணியாற்றுபவர்களில் 60 சதவீதமானோர் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டே பகுதிநேரமாக இந்தப் பணிகளைச் செய்கின்றனர். எஞ்சிய 40 சதவீதமானோர் இதனை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

முழுநேரப் பணியாளர்களாக அடையாளம் காணப்படும் 40 சதவீதமானோரைத் தனியாக வகைப்படுத்தி, அவர்களை முறையான சமூகப் பாதுகாப்பு முறைமைக்குள் இணைக்க அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, முறையான தொழில் வழங்குநர் ஒருவரை அடையாளம் காண முடியாத சூழலிலும், இவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய (EPF) வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு; விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு; விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.