தெஹிவளை மிருக காட்சி சாலையில் பிறந்த இரண்டு புதிய சிங்கக் குட்டிகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இவற்றைச் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண் மற்றும் பெண் சிங்கக் குட்டிகள் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பிறந்ததாக விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ, தெரிவித்தார்.
நான்கு மாதங்களான இந்த சிங்கக் குட்டிகள் தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படும். “இந்த இரண்டு குட்டிகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டாகவும் உள்ளன.








