தமிழக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு நிலை உருவாகும் வாய்ப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வருகின்றன.
அத்துடன்,எடப்பாடி தலைமையிலான அதிமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக உள்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கூட்டணி அமையும் சூழலில், முதல் இரண்டு ஆண்டுகள் முதலமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியை வழங்கும் முன்மொழிவுகள் குறித்து அதிமுக தரப்பில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தவெக தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், மேற்கண்ட தகவல்கள் குறித்து இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இவை அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.








