Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

1 month ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று (06.05.2026) நேரில் சென்று பார்வையிட்டார்.

தையிட்டி பகுதியில் பொதுமக்களின் பூர்வீக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, காணி உரிமையாளர்கள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விகாரையை அகற்றி, தங்களது காணிகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாகும்.

காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் பலமுறை காணி அளவீட்டு பணிகளை மேற்கொள்ள முயற்சித்தது. எனினும், அதிகாரிகளின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து, காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், நேற்று மாலை தையிட்டி பகுதிக்கு சென்ற யாழ் ஆயர், விகாரை அமைந்துள்ள பகுதியையும் மக்களின் காணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

அதேவேளை, மக்களின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் அவர் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
Next Post
இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.