வவுனியாவைச் சேர்ந்த டென்சிகா (19) என்ற இளம் பெண், நேற்று முன்தினம் (05) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை (06), வவுனியா சிறைச்சாலை முன்பகுதியில் பச்சை நிற மலர் வடிவ ஆடை அணிந்த நிலையில் அவர் கடைசியாக காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போன இளம் பெண் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் அல்லது அவரை எங்காவது கண்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.









