வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகள், கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸார், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உத்தரானந்த மாவத்தையில் அமைந்துள்ள வீட்டு தொகுதியை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 41 ஆண்களும் 33 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டுப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்ததுடன், மோசடியான நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








