கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கிடைத்த முறைப்பாடுகளில் சுமார் 2,300 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி,
2023ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4,103 சைபர் குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 753 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 3,348 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மற்றும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2024ஆம் ஆண்டு 3,159 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 2,177 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
2025ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மேலும் 4,170 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மற்றும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்தார்.








