மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் தலைகவசம், கையடக்க தொலைபேசிகளை பாதுகாப்பதற்கு என பொது நூலகத்தினுள் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து அதற்கு கப்பமாக பணம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிதி மாநகர சபைக்கு செல்லுகின்றதா? யார் கையாளுகின்றனர்? யார் பெற்றுக் கொள்கின்றனர் என மட்டு மாநகர முதல்வர் ,ஆணையாளர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா ஒருங்கிணைப்பாளர் அ.ராஜ்குமார் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னாள் உள்ள வாகன தரிப்பிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது இதில் மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபா பணம் அறவிடுகின்றனர். அந்த மோட்டார் சைக்கிளில் வருபவர்களின் தலைகவசத்தை பாதுகாக்க வேண்டியது அந்த வாகன தரிப்பிடத்தை குத்தகைக்கு பெற்றவர்களது கடமை.
ஆனால் பொது நூலகத்துக்குள் சட்டவிரோதமாக ஒரு கொட்டகையை அமைத்து அதில் நீதிமன்றத்துக்கு வருகின்றவர்களின் உடமையை பாதுகாப்பதாக கூறி தலைக்கவசம், குடைகள், கையடக்கத்தொலைபேசிகள் போன்ற பொருட்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 50 ரூபா தொடக்கம் 100 ரூபாவரை பணத்தை வசூலித்து ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தலைக்கவசம் மோட்டார் சைக்கிளுடன் சம்மந்தப்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட வேண்டுமாக இருந்தால் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் ஆதலால் நாங்கள் மோட்டார் சைக்கிளின் மீது தலைக் கவசத்தை வைத்து விட்டு சென்றால் அதனை பாதுகாக்க வேண்டியது குத்தகைக்கு பெற்ற உரிமையாளரதும் அங்கு கடமையாற்றும் உத்தியோக த்தர்களது கடமையாகும்.
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாது மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபாவும் தலைக்கவசத்துக்கு 50 ரூபாவும் அறவீடு செய்கின்றனர். இது ஒரு சட்டத்துக்கு விரோதமான மறைமுகமான கப்பமாகவே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பார்க்கின்றது.
இது தொடர்பில் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,








