வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணைந்து கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இருதரப்பு வர்த்தகம் 2030 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த வியட்நாம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் தெரிவித்துள்ளார்.








