Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்

இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்

1 month ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

‘ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்’ என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரத்த குரலில் சொன்னதாக, தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினேன். கொஞ்சம் குறைந்து விட்டது. என்னை போலவே ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறு கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்தேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவியை எதிர்பார்க்காமல் ஆதரவை தெரிவித்தனர். ஆதரவு தருவதாக அவர்களிடம் வாக்களித்த திருமாவளவன், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அடுக்குகிறார்.

ஸ்டாலின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார்’ என்று விஜய் விரக்தியில் பேசியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ‘அரசியல் பற்றி எனக்கும் தெரியும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிரக இப்படி எல்லோரும் எனக்கு எதிராக அணி திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை’ என விஜய் தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

‘ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆயிரம் நிபந்தனை விதிப்பவர்கள், பதவி பிரமாணம் எடுத்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. அப்படி ஒரு ஆட்சி அமைக்கத்தான் வேண்டுமா? பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு, தமிழக மக்களிடமே திரும்ப போய், முழுசா ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் மறுக்கவா போகிறார்கள்?’ என விஜய் கேட்டுள்ளார்.

பதறிப்போன அவரது ஆலோசகர்கள், அப்படி அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

‘நமக்கு நிறைய ஒப்ஷன்கள் இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் நம்மை கைவிடாது. மற்ற கட்சிகளிலும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவார்கள்’ என்று ஒரு ஆலோசகர் கூறியுள்ளார்.

சொந்த அண்ணனும், அண்ணனின் மகனும் சேர்ந்து மக்களின் தீர்ப்பை மாற்ற சதி செய்வதற்கு எதிராக தலைவரின் தங்கையே பொங்கி எழுந்த தகவலை இன்னொரு ஆலோசகர் சுட்டி காட்டியுள்ளார்.

‘ஒன்றே முக்கால் கோடி மக்களின் ஓட்டுகளை வீணாக்கி விட கூடாது. நீங்கள் ஒதுங்கினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பவே நீங்கள் எதிர்க்கும் சக்திகள் காத்திருக்கின்ரன. அந்த வலையில் விழ வேண்டாம்’ என ஒருவர் சொல்லியிருக்கிறார்.

‘எந்த வழியும் பிடிக்கவில்லை என்றால், எதிரிகளே ஆட்சி அமைக்கட்டும் என விட்டு விட்டு, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அமரலாம். உங்களை மீறி அந்த அரசால் எதுவும் செய்ய முடியாது. அதிலேயே மக்களின் விருப்பத்தை பெருமளவு பூர்த்தி செய்ய முடியும்’ என மற்றொருவர் கூறியுள்ளார்.

யாருக்கும் பதில் சொல்லாமல் விஜய் மௌனம் சாதிப்பதால், உடன் இருப்பவர்கள் டென்ஷனில் உள்ளனர் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் “ஹன்டா” வைரஸ் சீற்றம்; இரு இந்தியர்கள் உட்பட 40 பேருக்குத் தொற்று உறுதி!

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் "ஹன்டா" வைரஸ் சீற்றம்; இரு இந்தியர்கள் உட்பட 40 பேருக்குத் தொற்று உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.