தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பியபோது, அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘அமிதானந்த’ என்ற பிக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கையை வழிநடத்தியுள்ளதாக தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், அமிதானந்த என்ற பிக்கு கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.








