Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்; அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்; அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

4 weeks ago
in செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குப் பதிலளித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் மிகுந்த மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறேன். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் மூலம் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளும் கூட்டாண்மைகளும் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் உருவாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு விஜய் அளித்த பதிலும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
Next Post
ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு ; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு ; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.