தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குப் பதிலளித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் மிகுந்த மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறேன். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தச் செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் மூலம் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளும் கூட்டாண்மைகளும் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் உருவாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு விஜய் அளித்த பதிலும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








