Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்; ஆளுந்தரப்புக்கு மொட்டுக்கட்சி கடும் எச்சரிக்கை!

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்; ஆளுந்தரப்புக்கு மொட்டுக்கட்சி கடும் எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“மஹிந்த ராஜபக்ஷ திறைசேரியைக் கொள்ளையடிக்கவில்லை, மாறாக மக்களின் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்” என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.

விசாரணையின் பின்னர் அவர் வெளியேறியபோது அங்கு திரண்டிருந்த மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மனோஜ் கமகே உரையாற்றினார்.

அவர் உரையாற்றுகையில், விசாரணைகள் நடத்தப்படும் காலம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை அரசு குறிவைத்துள்ளதாகவும், பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைப்பதற்காகவே ஆளுந்தரப்பு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை ஒரு “சிங்கம்” என வர்ணித்த அவர், அவர் ஒருபோதும் குகைக்குள் ஒளிந்து கொள்ள மாட்டார் என்றும், சட்டத்திற்கு மதிப்பளித்து நேரடியாக வந்து வாக்குமூலம் வழங்கியதாகவும் கூறினார்.
திறைசேரி பிணைமுறி மோசடி மற்றும் நிலக்கரி மோசடிகளில் தொடர்புடையவர்களையும் இதேபோன்று விசாரிக்க அரசுக்கு துணிவு உள்ளதா எனவும் அவர் சவால் விடுத்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர் மீது கை வைக்கப்பட்டால் அழிவே ஏற்படும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், புலம்பெயர் தமிழ் விடுதலைப் புலி ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பொதுமக்கள் மீது மின் கட்டண சுமை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க போன்றவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய முயன்றால் அரசாங்கம் உடனடியாக வீழ்ச்சியடையும் எனவும், தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகள் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.