கல்லடி பாலம் கீழ் உள்ள வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
உயிரிழந்தவர் கல்லடி நியூ டச் பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை சுமார் 6.30 மணியளவில் வழக்கம்போல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீனவர் சடலத்தை கரைக்கு கொண்டு வந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதுடன், அதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








