Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெறும் 3,000 ரூபாவுக்காக ரயில் தண்டவாளம் விற்பனை; வாங்கிய கடை உரிமையாளரும் அதிரடி கைது!

வெறும் 3,000 ரூபாவுக்காக ரயில் தண்டவாளம் விற்பனை; வாங்கிய கடை உரிமையாளரும் அதிரடி கைது!

3 weeks ago
in செய்திகள்

வனவாசல ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த இடம் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக, ரயில் தண்டவாளத்தின் ஆணைகளைக் கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே, பொருட்களைக் கொள்வனவு செய்த நபரைக் கைது செய்ய முடிந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

ரயில் தண்டவாளப் பாகங்களைக் கழற்றிய நபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், அவர் 25 வயதுடைய ஒரு இளைஞர் எனவும் காலிங்க ஜயசிங்க தெரிவித்தார்.

வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமைக்கு மேலதிகமாக, இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க இங்கு குறிப்பிட்டார்.

இந்தப் பாகங்களைக் கழற்றி விற்பனை செய்வதன் மூலம் மிகக் குறைந்த லாபமே கிடைத்த போதிலும், இவ்வாறான சம்பவங்கள் ஊடாக மில்லியன் கணக்கிலான நட்டங்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, திருடப்பட்ட பொதுச் சொத்துக்களைத் தெரிந்தே கொள்வனவு செய்தமைக்காக, அந்தப் பொருட்களை வாங்கிய நபருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க:

“திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுதல் மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் தம்வசம் வைத்திருத்தல் ஆகிய இரு விடயங்கள் தொடர்பாகவும் வழக்குத் தொடரப்பட வேண்டும். இவ்வாறான கொள்வனவுகளைச் செய்யும் நபர்களைக் கைது செய்து சட்டம் நிலைநாட்டப்படும். சில வேளைகளில், திருடப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து, அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட பின்னர், ஒன்று அவர்கள் குற்றவாளிகளாக மாறுவார்கள் அல்லது பிணை வழங்கப்பட்டு வெளியே வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன, அது சட்ட நடைமுறை. ஆனால் நாங்கள் கைது செய்வதனையும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இந்தச் சம்பவத்தில், ஏற்பட்ட சொத்துச் சேதங்கள் மற்றும் உயிரிழப்பு அபாயங்கள் குறித்தும் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்!

வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.