யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
17வது யுத்த வெற்றி தின நிகழ்வு தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டிற்கு அச்சமின்மையையும், தேசத்திற்கான உன்னத சுதந்திரத்தையும் பெற்றுத்தந்த மாபெரும் வெற்றி நாளுக்கு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதத்திற்கு எதிராக எமது வீரமிக்க இராணுவத்தினர் பெற்ற உன்னத வெற்றி, ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது.
உலகில் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதை உலகம் கண்ட முதல் சந்தர்ப்பம் அதுவாக கருதப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மகத்தான வரலாற்று யுத்த வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் உரித்தான வெற்றி அல்ல.
யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் எமது சகோதர தமிழ் மக்களே ஆவர்.
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால், அப்பாவித் தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடப்பட்டு, அவர்களின் கைகளில் பலவந்தமாகத் துப்பாக்கிகள் திணிக்கப்பட்ட ஒரு காலம் அது.
யுத்த வெற்றியின் பின்னர், சகோதர தமிழ் மக்களை அச்சுறுத்துவதற்கும், பலவந்தமாகப் பிள்ளைகளைப் பறித்தெடுப்பதற்கும் அந்த புலிகள் இப்போது இல்லை.
எமது இராணுவத்தினரின் அர்ப்பணிப்பால், இன்று வட பகுதி பிள்ளைகள் அனைத்துப் பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர்.
அவை, இந்த யுத்த வெற்றியின் மூலம் சகோதர தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளாகும் என்றார்;








