எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் வெசாக் தானசாலைகளுக்கான பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமக்கு அருகாமையிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இந்த தானசாலைகளுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், சுகாதார அலுவலகத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, மிகவும் பாதுகாப்பான முறையில் உணவுகளை தயாரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பாட்டாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெசாக் பௌர்ணமி தினத்திற்கான தானசாலைகளுக்கான பதிவுகள் கடந்த 04ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








