தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூடப்பட்டுள்ளன.
ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் மேலும் 3 பாடசாலைகளும் மூடப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கான அறிவுறுத்தலை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.
தற்போதைய காலநிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்தலாமா அல்லது விடுமுறை வழங்கலாமா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு, அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச். எல். ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.








