யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவசரக் கேட்டுக்கொள்ளல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மாதம்பே பகுதி முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. அத்துடன், குதிரைக்கோவில் பகுதியிலும் வெள்ள நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, சாத்தியமான ஆபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, கொழும்பு நோக்கிப் பயணிப்போர் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், அவசரப் பயணங்களை மேற்கொள்ளும் போது அத்தியாவசிய விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








