அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நோய் நிலைமை காரணமாகவே தாம் இந்த இராஜினாமா முடிவை எடுத்ததாக, அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான கடிதத்தில், “எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் எனது கணவர் ஆபிரகாம் எனது பாறை போன்ற பெரும் பலமாக இருந்தார். எனது அரசியல் தொழிலுக்கும், தற்போதைய உளவுத்துறைப் பதவியின் அதியுயர் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.
தற்போது ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் (Cancer) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்தச் சவாலான தருணத்தில் ஒரு மனைவியாக நான் அவருடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் துல்சி கப்பார்ட் குறிப்பிட்டுள்ளார்.








