நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானப் பயணிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் தற்போது கடுமையான வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்லும் முக்கிய வீதிகளின் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்துகளில் பெரும் தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, விமானப் பயணிகள் தங்களது விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணித்தியாலங்களுக்கு (4 Hours) முன்னதாக விமான நிலையத்தைச் சென்றடையுமாறு உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சாதாரண வீதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத் தடையைத் தவிர்க்கும் பொருட்டு, விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் இயன்றவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் (Highway) பயன்படுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள “நய்கந்த” மற்றும் கோவின்ன ஆகிய பகுதிகள் வெள்ள நீரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








