வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் (Gas Explosion) சிக்கி, இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்து நடந்த இடத்தில் சிக்கியுள்ள மேலும் 9 தொழிலாளர்கள் வரை இதுவரை கண்டறியப்படாமல் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் எரிவாயு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த தருணத்தில், குறித்த நிலக்கரி சுரங்கத்தினுள் 247 தொழிலாளர்கள் நிலத்தடிப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போது உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் அவசரச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








