Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுராதபுரத்தில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு குரல் எழுப்பாத எதிர்க்கட்சி அட்டமஸ்தானாதிபதி தேரர் விவகாரத்தை எதிர்க்கிறது; தேரரின் சட்டத்தரணி

அனுராதபுரத்தில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு குரல் எழுப்பாத எதிர்க்கட்சி அட்டமஸ்தானாதிபதி தேரர் விவகாரத்தை எதிர்க்கிறது; தேரரின் சட்டத்தரணி

2 weeks ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனுராதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டு வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், அவ்வாறான சம்பவங்களுக்கு இல்லாத எதிர்ப்பு தற்போது அட்டமஸ்தானாதிபதி தேரருக்கு எதிராக எழுப்பப்படுவது, அவர் ஒரு புத்த பிக்குவாக இருப்பதாலேயே எனவும், இந்த எதிர்ப்பின் பின்னணியில் சம்பவத்துக்கு எதிரான நிலைப்பாட்டை விட புத்த மதத்திற்கு எதிரான மனோபாவமே அதிகமாக உள்ளதாகவும் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் சந்தேகநபரான தேரருக்காக முன்னிலையாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதவான் நீதிமன்றம் என்பது வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றம் அல்ல என்றும், சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பிணை வழங்கப்படுவது சாதாரண சட்ட நடைமுறை என்றும், பிணை மறுப்பதே விதிவிலக்கான சூழ்நிலை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேசமயம் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதனதேரர், பணத்திற்காகத் தனது மகளைத் துஷ்பிரயோகம் செய்வதற்குத் தெரிந்தே தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கடும் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க கடந்த 22 நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவத்தில் மட்டு வெல்லாவெளி சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவத்தில் மட்டு வெல்லாவெளி சப் இன்ஸ்பெக்டர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.