Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக விரைவாக வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முடித்து அவர்களுக்குக் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, அது தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் தலைமை சட்டத்தரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் மிகவும் விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இவ்வாறான வழக்குகளை முறையாக நடத்தி, நீதிமன்றம் மூலம் பெற்றுத்தரப்படும் கடுமையான தண்டனையானது, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும், அவர்களைத் தடுக்கும் விதமாகவும் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், அரசு தலைமைச் சட்டத்தரணி விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், பொலிஸ் தலைமை இயக்குநர் (DGP) டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் உட்படப் பொலிஸ் பிரிவு மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

"தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்"; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.