Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (25) இடம்பெற்ற ஊடக நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய பொருளாதார தரவுகளின் அடிப்படையில் ஒரு லீற்றர் டீசலின் விலை சுமார் 600 ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டிய நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார். அதேபோல் பெட்ரோல் விலையும் குறைந்தது 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்பட வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலைகளை அரசியல் காரணங்களுக்காக அல்லது செயற்கையாக குறைந்த நிலையில் வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். குறிப்பாக இது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்றும், ரூபாயின் பெறுமதி குறையும்போது இறக்குமதி செலவுகள் அதிகரித்து, பின்னர் எரிபொருள் விலைகளும் மேலும் உயர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

கடந்த காலங்களில் இதேபோன்ற சுழற்சியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், விலை திருத்தங்களை தாமதப்படுத்துவதால் பணவீக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்றார்.

எனினும், எரிபொருள் விலை உயர்வுகள் மக்களுக்கு நேரடியாக சுமையாக மாறாத வகையில் சமூக மானிய திட்டங்கள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலக்கு அடிப்படையிலான மானியங்களை வழங்க முடியும் என்றார்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான மானியத்தை வழங்குவதற்குப் பதிலாக உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாக ஆதரவு வழங்குவது அரசுக்கு பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும் என தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்மூலம் எரிபொருள் விலை திருத்தங்களின் தாக்கத்தை குறைத்து, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.