Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மகிந்த ராஜபக்ச பிள்ளையானை சந்தித்ததாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு”; உதய கம்மன்பில

“மகிந்த ராஜபக்ச பிள்ளையானை சந்தித்ததாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு”; உதய கம்மன்பில

1 week ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்ததாக அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தில் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள விசேட விருந்தினர் வருகைப் பதிவேட்டை ஒருமுறை சோதித்தாலே, யார் சிறைச்சாலைக்குச் சென்றார்கள் என்பது அம்பலமாகிவிடும்.

இதற்கு இலங்கையிலேயே ஆதாரங்கள் இருக்கும்போது, எதற்காக ஷானி அபேசேகர தலைமையிலான அதிகாரிகள் பிரான்ஸ் செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. அசாத் மௌலானா தற்போது பிரான்ஸில் இல்லை சுவிட்சர்லாந்தில்.

அசாத் மௌலானாவின் கருத்துகளை அப்பட்டமான பொய்கள் என உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணைக்குழு அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்தது.
இமா ஆணைக்குழுவின் இந்த அறிக்கையைச் செல்லுபடியற்றதாக்காமல், அந்த அறிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, பொதுமக்களின் பணத்தில் அந்தப் பொய்யனிடமே சென்று விசாரணை நடத்துவது எவ்வகையில் நியாயம்?

ஷானி அபேசேகர, அசாத் மௌலானா தற்போது வசிக்கும் சுவிட்சர்லாந்துக்குச் செல்லாமல், பிரான்ஸ் சென்றமைக்குக் காரணம், அந்த நாட்களில் அவருக்குப் பிரான்ஸில் ஏதோ ஒரு தனிப்பட்ட வேலை அல்லது மருத்துவச் சிகிச்சை தேவை இருந்திருக்க வேண்டும். அதை அரசுப் பணத்தில் நிறைவேற்றிக் கொள்ளவே இந்த விசாரணை நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியைச் சந்திக்கச் சென்ற ஷானி அபேசேகர, ஏன் அவரை கைது செய்யவில்லை?

சாரா ஹசீம் சகோதரர் ரில்வானுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரகசிய சிகிச்சை பெற்றுக்கொடுக்க உதவியமை, போலி அடையாளத்தில் இரண்டாவது திருமணம் செய்தமை, மணப்பெண்ணின் தந்தையை மோசடியான காசோலைகளை வழங்கி ஏமாற்றியமை, மற்றும் குடிவரவு-குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் அசாத் மௌலானா மீது உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் என்பது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. அங்கு சென்ற ஷானி அபேசேகரவுக்கு அவரைச் சட்டப்படி கைது செய்ய அதிகாரம் இருந்தும், அவரைச் சுதந்திரமாக விட்டுவிட்டு வந்ததன் மர்மம் என்ன எனவும் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
Next Post
ஓமானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை; அச்சுறுத்தும் டிரம்ப்

ஓமானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை; அச்சுறுத்தும் டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.