படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்
விசாரணைகளின் அடிப்படையில், படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம்
காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால
அதிபரான நடராசா மயூரன் நேற்று 28 உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை
கைது செய்து, போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








