சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்படும் பொலோனியம்-210 என்பது மிக ஆபத்தான கதிரியக்க விஷமாகும் எனவும், இது மனித உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது எனவும் கூறப்படுகிறது.
இந்த வகை விஷத்தின் தன்மை காரணமாக, சில சந்தர்ப்பங்களில் மரணம் இயல்பான நோய்களால் ஏற்பட்டது போல தோன்றக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக, இதய நோய் இருந்தால் மாரடைப்பு போலவும், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பக்கவாதம் போலவும், நீரிழிவு இருந்தால் நீரிழிவு கோமா போலவும் தோன்றும் என குறிப்பிடப்படுகிறது.

இதனால், வெளிப்படையான காயங்கள் இல்லாமல் மரணம் நிகழ்ந்ததாக தவறாக கருதப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிலர் இது திட்டமிட்ட முறையில் மறைமுகமாக நடந்த கொலை என காட்டுவதற்காகவே சடலம் வேறு இடத்தில் வைத்து பின்னர் சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், இது தொடர்பான உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.








