Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

5 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம் காலங்கங்கள் கடந்தாலும் அழியாத வடு.

தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடக்கவுள்ளது.

கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், அதாவது ஜூன் 1 ஆம் திகதி அதிகாலையில் அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ ஆகியோர் தலைமையிலான பாதுகாப்புப் படையினரும் பேரினவாதக் கும்பலும் இணைந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினர்.

உலகப் பிரசித்தி பெற்ற அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழின் மிக அரிய வரலாற்று ஆவணங்கள், பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் மற்றும் மேற்கத்தைய அறிஞர்களின் அறிவுச் செல்வங்கள் எனச் சுமார் 97,000 அரிய வகை நூல்கள் முற்றாக எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.

ஒரு சமூகத்தை முற்றுமுழுதாக அழித்தொழிக்க, அதன் கல்வியையும் மரபுரிமை அடையாளங்களையும் சிதைக்க வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனையின் வெளிப்பாடே இந்த யாழ் நூலக எரிப்பாகும்.

இது குறித்துச் சர்வதேச எழுத்தாளர்கள் கூட, ‘தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் குரூரத்தைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவமே போதும்’ எனப் பிற்காலத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நூலக எரிப்புக்குப் பின்னரே ஈழ மண்ணில் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்ததுடன், பிரதேசம் தோறும் மாவீரர் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டு வாசிப்புப் புரட்சி ஏற்பட்டது.

தற்போது யாழ்ப்பாணப் பொது நூலகம் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றாலும் அரிய பொக்கிசத்தை இனவெறி காடையர்கள் அழித்தமை மிகப்பெரும் இழப்பாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
Next Post
மற்றுமொரு பௌத்த பிக்கு15 வயது சிறுமி விவகாரத்தில் கைது

மற்றுமொரு பௌத்த பிக்கு15 வயது சிறுமி விவகாரத்தில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.