Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா வர்த்தகர் பல கோடி ரூபாய் கடனுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக முறைப்பாடு!

வவுனியா வர்த்தகர் பல கோடி ரூபாய் கடனுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக முறைப்பாடு!

5 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்ததுடன் “கௌரி ஜுவல்லர்ஸ்” என்ற பெயரில் நகை வியாபாரம் மேற்கொண்ட வர்த்தகர் ஒருவர், பல வர்த்தகர்களிடமிருந்து 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாகப் பெற்றுக்கொண்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நகை வியாபாரி ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின்படி, இளையதம்பி சுகுமார் (41) என்பவரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வவுனியாவில் பல நகைக் கடைகளுக்கு நகைகள் விநியோகம் செய்ததுடன், நகை வியாபாரிகளுடன் பல்வேறு நிதி மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல்கள் அறிந்தவர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரை அல்லது 077 410 1802 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
Next Post
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.