Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனைவருக்கும் சமமா?; நாமல் ராஜபக்ச கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனைவருக்கும் சமமா?; நாமல் ராஜபக்ச கேள்வி

1 day ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்தப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர், ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இசை மற்றும் கலை வெளிப்பாடுகள் பயங்கரவாத குற்றங்களாகக் கருதப்படுகின்றன என்றால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களை பயன்படுத்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சமூக ஊடகப் பதிவில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க உறுப்பினர் ஒருவர் அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற பாடல்களை வெளிப்படையாக பகிர்ந்ததாகவும், அப்போது சட்ட அமுலாக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக தொடர்ந்தும் சட்டத்தின் கீழ் காணப்படுகின்ற போதிலும், அதனை மகிமைப்படுத்தும் எந்தச் செயலையும் தாம் ஆதரிப்பதில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இருவரில் ஒருவர் அரசியல் பாதுகாப்பைப் பெற, மற்றொருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு ஒரு விதியும் சாதாரண இளைஞர்களுக்கு மற்றொரு விதியும் நடைமுறையில் இருப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள அவர், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில், இந்தக் கைது ஒருதலைபட்சமான அதிகார துஷ்பிரயோகமாகக் கருதப்படும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.