சஹாரா பாலைவனத்தில் நைஜர்–அல்ஜீரியா எல்லை அருகே இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், குடியேற்றப் பயணிகள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியிலிருந்து ஹஜ் பெருநாள் பயணங்களை முடித்துவிட்டு நைஜருக்கு திரும்பிக் கொண்டிருந்த 51 பேர் கொண்ட குழு, அசாமாகா நகருக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற லாரி திடீரென இயந்திரக் கோளாறால் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

கடுமையான வெப்பநிலை நிலவும் பாலைவனப் பகுதியில், நீண்ட தூரத்திற்கு மனித நடமாட்டமோ தொடர்பு வசதிகளோ இல்லாத சூழலில், பயணிகள் பல நாட்கள் சிக்கித் தவித்துள்ளனர். அவர்களிடம் இருந்த குடிநீர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பலர் கடுமையான தாகம் மற்றும் வெப்பத்தால் உயிரிழந்ததாகவும், மொத்தம் 49 பேர் வரை மரணமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவர் மட்டும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது பெரும்பாலானோர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் அந்தப் பாலைவனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.









