பிலிப்பைன்ஸில் இன்று (08) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அனர்த்தத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதுடன், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் நிலைமையை ஆய்வு செய்த அதிகாரிகள், இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கையை நீக்கியுள்ளனர்.
இதற்கிடையில், பல கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








