தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol-க்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வட கொரியாவுடனான பதற்றத்தை திட்டமிட்டு அதிகரிக்கும் நோக்கில் இராணுவ ஆளில்லா விமானங்களை வட கொரிய வான்பரப்பிற்குள் அனுப்ப உத்தரவிட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த நடவடிக்கை, பின்னர் நாட்டில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான காரணத்தை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எதிரி நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட்டமை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தென் கொரிய அரசியல் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.








