தற்பொழுது எலிப்பால் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த பால் அன்றாட உணவுப் பயன்பாட்டிற்கோ அல்லது வணிக நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கோ தயாரிக்கப்படுவதில்லை. இது முழுமையாக மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எலிகளின் DNA மனிதர்களின் மரபணு அமைப்புடன் பல முக்கிய ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதால், அவை மருத்துவ ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக புற்றுநோய், லுகேமியா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளில் இந்த ஆராய்ச்சிகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
மேலும், புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு திறனை மதிப்பீடு செய்வதற்கும் இந்த பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகள் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.








