Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் (நிர்வாகம்) தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பின் பிரதி சாக்கிய புத்திர தர்ம அமைப்பின் பிரதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையின் மறுசீரமைப்பு என்ற போர்வையில், ஐயனார் கோவிலை தொல்பொருள் மரபுரிமை சிதைவடையும் வகையில் புனரமைப்பது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட, உங்களது இல. MBRCA/07/வேறு மற்றும் 2026.03.20ஆம் திகதியிட்ட கடிதத்துடன் தொடர்புடையது.

அதற்கமைய, எனது இதே இலக்கத்தைக் கொண்ட மற்றும் 2026.03.30 ஆம் திகதியிடப்பட்டு முல்லைத்தீவு பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலம், மேற்குறிப்பிட்ட குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் எனவும், அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1940 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம், தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அத்தகையதொரு பௌத்த மதத் தலத்துக்குள் ஒரு இந்து கோவிலை நிர்மாணிப்பதன் மூலம், ஏதேனும் ஒரு தரப்பினரால் புனிதமாகவும் கௌரவத்துடனும் மதிக்கப்படும் ஒரு குழுவினரை தூண்டும் வகையில் செயல்படுவது, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் 31 (ஆ) பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் இவ்விடத்தில் ஒரு இந்து கோவிலை நிர்மாணிப்பதற்கோ அல்லது புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கோ அனுமதி வழங்க முடியாது என்பது அறிவிக்கப்பட்டுள்ளதை தயவுடன் அறியத்தருகின்றேன்.

கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளருக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தின் பிரதியொன்றை உங்களது மேலதிக புரிதலுக்காக இத்துடன் இணைத்துள்ளேன் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றேன் என்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!
செய்திகள்

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

June 13, 2026
சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

June 13, 2026
இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

June 13, 2026
தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி
செய்திகள்

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

June 13, 2026
குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்
செய்திகள்

குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

June 13, 2026
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு
செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

June 12, 2026
Next Post
தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.