பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் நேற்று (12) இரவு முதல் காணாமல் போயிருந்ததாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
இதன்போது, சிறுவனின் சடலம் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








